திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியில் கடந்த 21ம் தேதி நடந்த புனித மரிய மதலேனாள் ஆலய திருவிழாவின் போது நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில், சிகிச்சை பெற்று வந்த சுமை தூக்கும் தொழிலாளி ராபின் அருள்ராஜ் (26) உயிரிழந்தார். வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், திருவிழா ஏற்பாடு செய்த நிர்வாகிகளை கைது செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
