சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் பெய்த மழை காரணமாக 15 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது. அபுதாபி, டெல்லி, குவஹாத்தி, கோவை, திருச்சி, மும்பை விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து அபுதாபி, டெல்லி, மும்பை, பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
