தேர்தல் வழக்குகள் தொடர்பாக 3 வாரங்களில் பதிலளிக்க முதல்வர் விஜய்-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளின் தேர்தல் வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய்-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின் 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகளிலும் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கிலும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories: