பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் 105வது ஆண்டு விழாவையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டார். தற்போது 14வது ஆண்டாக ஆட்சியில் இருக்கும் அதிபர் ஜி ஜின்பிங், பணக்கார நாடுகள் பல நூற்றாண்டுகளில் சாதித்ததை சீன சில தசாப்தங்களிலேயே அடைந்துவிட்டது.
உலகம் கொந்தளிப்பு மற்றும் மாற்றத்தின் ஒரு புதிய காலகட்டத்தில் நுழைந்துள்ளது. இது மனித குலத்தை ஒரு முக்கிய திருப்பத்தில் நிறுத்தியுள்ளது. உலக அமைதி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய வகையிலான சர்வதேச உறவுகளை உருவாக்குவதை முன்னெடுத்து செல்லவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் ” என்றார்.
