சென்னை: திருவள்ளூர் அருகே இறால் ஆலையில் அமோனியா கசிவால் இறந்த ஒடிசா இளம்பெண் உடலுக்கு இருமுறை உடற்கூராய்வு பரிசோதனை. அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்த பூர்ணிமா ஜூவாங்கா கடந்த 21ம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 21ம் தேதி உயிரிழந்தது பூர்ணிமா ஜூவாங்கா இல்லை என தெரிய வந்ததை அடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை. DNA பரிசோதனையை அடுத்து நடத்திய தொடர் விசாரணையில் ஒடிசாவை சேர்ந்த சுஜைனி ஜூவாங்கா என தெரிய வந்தது.
