தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த போதும் இந்தியாவில் அதிகரிக்கும் இறக்குமதி

டெல்லி: இறக்குமதி வரிகளை உயர்த்தி, தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த போதும், தங்கம் இறக்குமதி இந்தியாவில் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மிக அதிகமாக காணப்பட்ட போதிலும், இந்தியாவின் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மே மாதத்தில் 34 சதவீதம் உயர்ந்து 3.41 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த 2025 மே மாதத்தில் 566.22 மில்லியன் டாலராக இருந்த வெள்ளி இறக்குமதி, இந்த ஆண்டு மே மாதத்தில் வெறும் 75.57 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இது 86.65 சதவீத வீழ்ச்சியாகும். மேலும் தங்கம் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக இந்தியாவின் ஒட்டு மொத்த வர்த்தகப் பற்றாக்குறை, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையேயான வித்தியாசம் 28.21 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பில் தங்கம் மட்டும் 5% அதிகமாக பங்களிக்கிறது.

இந்தியாவிற்கு தங்கம் இறக்குமதி செய்யப்படும் நாடுகளில் சுவிட்சர்லாந்து 40 சதவீதப் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகம் 16 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. மேலும் தென்னாப்பிரிக்கா சுமார் 10 சதவீதப் பங்களிப்பையும் கொண்டுள்ளது. இருப்பினும், கடந்த மே மாதத்தில் சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 57.73 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

இறக்குமதி வரிகளை உயர்த்தி, தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த போதும், தங்கத்தின் இறக்குமதி இந்தியாவில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Stories: