சென்னையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த இளைஞர் கைது

சென்னை: சென்னை வடபழனியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த பிரித்விராஜன் (30) என்பவர் போலீசார் கைது செய்தனர். பணிமுடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதை அடுத்து வடபழனி காவல் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பிரித்விராஜன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: