ஈரோடு, மே 19: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை குறித்து 285 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை உரிய துறை அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர் கந்தசாமி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
