தேனி: தேனி மாவட்டத்திற்கு மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார். வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 30ம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
