கிருஷ்ணகிரி, மே 8: கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை அருகேயுள்ள பெத்தமேலுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுமி படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி சிறுமியின் தந்தை மகாராஜகடை போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சிறுமி குறித்து விசாரித்து வருகின்றனர்.
