தொகுதி மறுசீரமைப்பின் மூலமாக தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும்! திருச்சி சிவா பேட்டி

 

டெல்லி: தொகுதி மறுசீரமைப்பின் மூலமாக தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார். எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்கள் குரல் எடுபடாது. திட்டமிட்டு தென்னிந்தியாவை வஞ்சிக்கவே தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டுள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் ஒன்றாக கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன?. உறுதியோடு அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நிற்கிறோம். பாஜகவின் சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு 48 இடங்கள்தான் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: