நெல்லை: காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 10 முதல் 12-ம் தேதி வரை பக்தர்கள் கோயிலில் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழக்கப்பட்டுள்ளது என்று நெல்லை ஆட்சியர் ஆனந்த மோகின் தெரிவித்துள்ளார். போதிய முன்னேற்பாடுகள் மேற்கொள்வதற்காக ஆக.7, 8 ஆகிய 2 நாட்கள் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
