புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களுக்கு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் மிரட்டல் விடுத்தது போன்ற போலி ஏஐ வீடியோக்களின் இணைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கல்வி முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள், இளைஞர்களுக்கு ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் மிரட்டல் விடுவது போன்று செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இதுகுறித்து பியூஷ் கோயல் தீங்கிழைக்கும் விதமாக இத்தகைய காணொலிகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் பியூஷ் கோயல் தொடர்பான போலி காணொலிகளி்ன் சமூக ஊடக இணைப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
