சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் கனிம வளங்கள் கடத்தப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி பகுதிகளில் உள்ள குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு எம்.சாண்ட், ஜல்லி, கற்கள் கடத்தப்பட்டு வருகிறது. சோதனைச் சாவடியில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகளை பரிசோதிக்காமல் விடுவதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
