சென்னை: அரசையோ, அமைச்சர்களையோ வெறுமனே விமர்சிப்பது பொது அமைதிக்கு எதிரான குற்றமாகாது என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பிய புகாரில் கைதானவரின் வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட வினோத் சூர்யாவை நிபந்தனை ஜாமினில் விடுவிக்க சென்னை நீதிமன்றம் ஆணை விடுத்துள்ளது.
