இந்தியாவில் குடும்பத் தகராறில் 6 மாதத்தில் 554 ஆண்கள் கொலை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: குடும்பத் தகராறில் 6 மாதத்தில் 554 ஆண்கள் கொலை செய்யப்பட்டதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஊடகங்​களில் வெளி​யான செய்​தி​கள் மற்​றும் தங்​களது கள ஆய்வில் கிடைத்த ஆவணங்​களின் அடிப்​படை​யில் அரி​யானா மாநிலம் குரு​கி​ராமைச் சேர்ந்த ஏகம் நியாய் அறக்​கட்​டளை என்ற தொண்டு நிறு​வனம், ஜூலை 14 வரை திரட்​டிய புள்​ளி​ விவரங்​களை வெளி​யிட்​டுள்​ளது. அதில், கடந்த 6 மாதங்களில் மட்​டும் 322 கணவர்​கள் அவர்​களது மனைவிகளாலோ அல்​லது மனை​வி​யின் கள்​ளக்​காதலர்களாலோ ​கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர்.

மேலும், குடும்​பத் தகராறு, பொய் வழக்​கு​, வரதட்​சணை புகார்​கள் போன்ற மன உளைச்​சல்​களால் 232 கணவர்​கள் தற்​கொலை செய்துள்​ளனர். இதன் மூலம், இந்​தி​யா​வில் நாளொன்​றுக்கு சராசரி​யாக இரண்டு கணவர்​கள் படு​கொலை செய்​யப்​படு​வதும், ஒரு கணவர் தற்​கொலை செய்​து ​கொள்​வதும் கண்​டறியப்​பட்​டுள்​ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கணவர்​கள் படு​கொலை செய்​யப்​பட்ட 322 வழக்​கு​களில், 60.2 சதவீத வழக்குகளுக்கு கள்​ளக்​காதலே முதன்​மைக் காரண​மாக இருந்​துள்​ளது. மனை​வி​யின் கள்​ளக்​காதலை கணவர் கண்​டித்​த​தாலோ அல்​லது அவர்​களின் உறவுக்கு இடையூறாக இருந்​த​தாலோ, கள்​ளக்​காதலனுடன் இணைந்து மனை​வியே கணவரைக் கொலை செய்​யச் சதித்​திட்​டம் தீட்​டியது ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

அதே​போல், பதி​வான 232 கணவர்​களின் தற்​கொலைகளுக்​குப் பின்​னால் இருக்​கும் காரணங்​களும் கண்​டறியப்​பட்​டுள்​ளன. தற்​கொலைகளில் 104 வழக்​கு​கள் நீண்​ட​கால குடும்​பத் தகராறால் நிகழ்ந்​துள்​ளன. மனைவி மற்​றும் மாமனார் வீட்​டாரின் சித்​ர​வதை காரண​மாக 57 பேரும், மனை​வி​யின் கள்​ளக்​காதல் விவகாரத்தால் 29 பேரும் தற்​கொலை செய்துள்ளனர். மேலும், பொய் வழக்​கு​கள், காதலி அல்​லது அவரது குடும்பத்தினரின் மிரட்​டல் போன்​றவை​யும் தற்​கொலைகளுக்​குக் காரண​மாக அமைந்​துள்​ளன.

பல தற்​கொலைகளில், தங்​களுக்கு நேர்ந்த கொடுமை​கள் குறித்து ஆண்​கள் விரி​வான கடிதம், வீடியோ பதிவு​களை விட்​டுச் சென்​றுள்​ளனர். இதில் உத்​தரப் பிரதேச மாநிலம் முதலிடத்​தில் உள்​ளது. அங்கு 93 கணவர்​கள் படு​கொலை செய்​யப்​பட்​டுள்​ளனர். 103 பேர் தற்​கொலை செய்​து​கொண்​டுள்​ளனர். இதற்கு அடுத்​த​படி​யாக மத்தி​யப் பிரதேசம், ராஜஸ்​தான், தெலங்​கா​னா, மகா​ராஷ்டி​ரா, அரி​யா​னா, பீகார், கர்​நாடகா மற்​றும் குஜ​ராத் ஆகிய மாநிலங்கள்​ உள்​ளன என்று ஆய்​வில்​ தெரி​விக்​கப்​பட்​டுள்ளது.

Related Stories: