தென்காசி: தமிழக – கேரள எல்லைப் பகுதியான ஆரியங்காவு சோதனைச்சாவடியில் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. லாரி ஓட்டுநர்களிடம் கேரள காவல் துறையினர் லஞ்சம் வாங்கும் வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. காய்கறி கொண்டு செல்லும் தமிழக லாரி ஓட்டுநர்களிடம் கேரள காவல் துறையினர் லஞ்சம் பெற்றனர். ஒவ்வொரு வாகனத்துக்கும் தலா ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டாய வசூல் செய்து வருவதாக என கூறப்படுகிறது.
