மதுரை: தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீட்டித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
