உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்பு

சென்னை: உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2024க்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு தொடங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2024க்கான ஓராண்டு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல், அகழாய்வுக்கான பட்டய வகுப்பு 2024 ஜனவரி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த வகுப்பில் கல்வெட்டியல், தொல்லியல் வழி தமிழக வரலாறு, மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டு படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும். இதில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டய வகுப்பு வார விடுமுறை நாளான ஞாயிறுதோறும் (முழுநேரம்) நேரடியாக ஓராண்டு காலம் நிறுவனத்தில் நடைபெறும்.

இதற்கான விண்ணப்பத்தை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு கிடையாது. விண்ணப்ப கட்டணம் ரூ.100 + சேர்க்கை கட்டணம் ரூ.3000 + அடையாள அட்டை ரூ.100 என ரூ.3200 செலுத்த வேண்டும். கட்டணத்தை The DIRECTOR, International Institute of Tamil Studies எனும் பெயரில் வங்கி வரைவோலையாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது நேரடியாக நிறுவன அலுவலகத்தில் ரொக்கமாக செலுத்தி விண்ணப்பம் செய்திடலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் டிசம்பர் 29 மாலை 5 மணிக்குள் நிறுவன முகவரிக்கு வந்து சேர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டய வகுப்பு appeared first on Dinakaran.

Related Stories: