“ஆடை, அணிகலன்களுக்கு பெண்கள் அடிமையாகக் கூடாது: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு

சென்னை: ஆடை, அணிகலன்களுக்கு பெண்கள் அடிமையாகக் கூடாது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். இடஒதுக்கீடு பெண்களின் உயர்கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு கொண்டு வந்தார். அதே போல் தற்போது உள்ள தமிழ்நாடு அரசு ‘புதுமைப்பெண்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

குழந்தை திருமணம் பற்றி தகவல் கொடுத்தால் கண்டிப்பாக தடுத்து நிறுத்தப்படும். குழந்தை திருமணங்களை ஒருபோதும் அனுமதிக்க கூடாது. 1098’ என்ற எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். புகார் அளித்தவர்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும்”

“ஆடை, அணிகலன்களுக்கு பெண்கள் அடிமையாகக் கூடாது. பள்ளி பருவத்தில் காதல், திருமணம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மிக நன்றாக படித்து நல்ல இடத்திற்கு முன்னேற வேண்டும். தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்றால் மாணவர்கள் கவலை மற்றும் மனச்சோர்வு கொள்ள வேண்டாம். தன்னம்பிக்கையுடன் படித்து மீண்டும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று சென்னை சூளைமேட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசியுள்ளார்.

 

 

 

 

The post “ஆடை, அணிகலன்களுக்கு பெண்கள் அடிமையாகக் கூடாது: அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: