நிர்வாகிகள் மாற்றத்தின் போது இளைஞர் காங்கிரசாருக்கு 50 சதவீத பதவிகள்: செல்வப்பெருந்தகை உறுதி

சென்னை: தமிழக இளைஞர் காங்கிரசின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு, தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் வைசாக், சாகரிக்க ராவ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக காங்கிரஸ் கட்சியில் நிர்வாகிகள் மாற்றி அமைக்கும்போது, ஏறக்குறைய 50% இளைஞர் காங்கிரசாருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இளைஞர் காங்கிரசில் சிறப்பாக பணியாற்றுபவர்களை தேர்ந்தெடுத்து, கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்குவோம். ராகுல் காந்தி குறித்து விமர்சித்து பேசுபவர்களை இனிவரும் காலங்களில் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு போராட்டங்களை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post நிர்வாகிகள் மாற்றத்தின் போது இளைஞர் காங்கிரசாருக்கு 50 சதவீத பதவிகள்: செல்வப்பெருந்தகை உறுதி appeared first on Dinakaran.

Related Stories: