டெல்லி: தமிழகத்தைச் சேர்ந்த நெசவாளர் பாலகிருஷ்ணனுக்கு டெல்லியில் தேசிய கைத்தறி விருது வழங்கப்பட்டது. மத்திய ஜவுளித் துறை சார்பில் டெல்லியில் நடந்த விழாவில் விருதை துணை குடியரசுத் தலைவர் வழங்கினார். விருதுடன் சேர்ந்து ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையையும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் வழங்கினார்.