மிகக்குறைவாகவே மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய அளவில் தண்ணீர் இல்லை: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டி

பெங்களூரு: மிகக்குறைவாகவே மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய அளவில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு உரிய தண்ணீரை திறக்கக் கோரி தமிழக அரசு முறையிட்டு வரும் நிலையில், சித்தராமையா விளக்கம் அளித்தார். கேரளா, குடகு மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவே மழை பெய்துள்ளது. போதிய மழை பெய்யாததால் கூடுதலாக தண்ணீரை திறக்க முடியவில்லை என்று சித்தராமையா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

The post மிகக்குறைவாகவே மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய அளவில் தண்ணீர் இல்லை: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: