வாகனங்களுக்கான சாலை வரியை கைவிட ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: வாகனங்களுக்கான சாலை வரியை கைவிட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சாலை வரி என்பது சதவீத அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதால், வாகனங்களின் விலை உயர்ந்தாலே சாலை வரியும் உயரும் என்ற நிலையில், அதனுடைய சதவீதத்தை ஏற்றி மேலும் வாகனத்தின் விலையை உயர்த்துவது என்பது கொடுமையிலும் கொடுமை. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தொடர்ந்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்ற தி.மு.க. அரசின் செயல் வழிப்பறிக் கொள்ளைக்குச் சமம். சாதாரண ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வாகனங்களுக்கான சாலை வரி உயர்வினை தி.மு.க. அரசு கைவிட வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post வாகனங்களுக்கான சாலை வரியை கைவிட ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: