உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை அடித்து உதைத்து சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம்!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை அடித்து உதைத்து சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம் மீண்டும் அரங்கேறி உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் விக்கி என்ற இளைஞரை ஆதித்யா என்பவரும் அவரது நண்பர்களும் ஒன்று சேர்ந்து அடித்து உதைத்துள்ளனர். பின்னர் முகம் முழுவதும் காயம் அடைந்த அந்த இளைஞர் மீது ஆதித்யா சிறுநீர் கழித்து தகாத வார்த்தைகளில் திட்டிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி உள்ளது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இந்த சம்பவம் 3 மாதங்களுக்கு முன்பு நடந்ததாக தெரிவித்தனர். மேலும் குற்றவாளி ஆதித்யா கைது செய்யப்பட்டதாகவும் அவரது நண்பர்களை தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் எதற்காக நடந்தது என்பது குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பட்டியல் இன இளைஞர்களை தாக்குவதும் அவர்கள் மீது சிறுநீர் கழிப்பதும் போன்ற கொடூர சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது போன்று உத்தரப் பிரதேசத்தில் சோன்பத்ராவில் பட்டியல் இனத்தை சேர்ந்த இளைஞரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்த பகீர் சம்பவம் அரங்கேறியது இதே போன்று மத்திய பிரதேசத்திலும் பழங்குடி இனத்தவர் மீது பாஜக நிர்வாகி சிறுநீர் கழித்த வீடியோவையும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

The post உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை அடித்து உதைத்து சிறுநீர் கழித்த அதிர்ச்சி சம்பவம்! appeared first on Dinakaran.

Related Stories: