திருவனந்தபுரம்: ஒன்றிய இணை அமைச்சராக தொடருவேன், நான் ராஜினாமா செய்ய போவதாக வெளியான தகவல் தவறானது என கேரள நடிகரும், பாஜக எம்பியுமான சுரேஷ் கோபி அறிவித்துள்ளார். இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற நிலையில் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என சுரேஷ் கோபி கூறியதாக தகவல் பரவிய நிலையில் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.