இதில் கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கப்பல் போக்குவரத்து தொடர்புடைய பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கலந்துரையாடல் மூலம் இந்தியாவில் கப்பல் போக்குவரத்து மேம்படும்.
சென்னை துறைமுகத்தில் உள்ள கப்பல் முனையம் தற்போது 1,500 பயணிகளை கையாளும் வகையில் உள்ளது. 3 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் இந்த முனையம் ரூ.19.25 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. அதேபோன்று இங்குள்ள ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கையாள்வதற்கான நடைபாதை சேமிப்பு மையம் ரூ.36.91 கோடியில் 9.90 ஹெக்டேர் பரப்பளவில் மேம்படுத்தப்பட உள்ளது. சென்னை துறைமுகத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான ஹைட்ராலிக் பவர் கட்டிடத்தை நினைவு சின்னமாக மாற்றி கடல்சார் வரலாற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியம் உருவாக்கிட அந்த கட்டிடம் ரூ.5.25 கோடியில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இந்த புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள், இந்தியா கப்பல் கட்டுமானத்தில் உலகின் முதல் 10 இடங்களில் ஒன்றாக வரும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கப்பல் கட்டுமானத்தில் உலகின் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா வரும்: ஒன்றிய அமைச்சர் நம்பிக்கை appeared first on Dinakaran.
