ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு செயல்படக்கூடாது. வாக்களித்த மக்கள், வாக்களிக்காத மக்கள் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. அனைவரையும் சரிசமமாக பார்க்க வேண்டும். மலேசியாவில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கான உரிமைகள், வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, மலேசியாவில் தனியாக ஒரு கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளேன். மலேசியாவை வளர்ச்சி பாதைக்கு எடுத்துச் சென்றவர்கள் தமிழர்கள். அவர்கள் இன்று ஒடுக்கப்படுகிறார்கள். தமிழர்கள் தொடர்ந்து பல நாடுகளில் ஒடுக்கப்படும் காரணத்தால்தான் எங்களுடைய உரிமையை பெறுவதற்கு புதிய கட்சிகளை தொடங்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு வருத்தம் அளிக்கிறது: மலேசியாவின் பினாங்கு மாஜி துணை முதல்வர் பேட்டி appeared first on Dinakaran.