இந்த வழக்கு கடந்த 10 வருடமாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 46 லட்சம் நிறுவனத்திற்கு தர வேண்டிய சூழலில், முதற்கட்டமாக 60 நாட்களுக்குள் 30 சதவீதம் தொகையை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும், இல்லையென்றால் 11 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சிவசக்தி பாண்டியன் தொகையை செலுத்தாததால் கைது நடவடிக்கையை மேற்கொள்ள பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை அவரது இல்லத்தில் நேற்று கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைதானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post தொலைக்காட்சி உரிமம் தருவதாக ரூ.1.46 கோடி மோசடி திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது appeared first on Dinakaran.