கடந்த பிப்ரவரியில் துருக்கி – சிரிய எல்லையில் பயங்கர பூகம்பத்தால் 50,000க்கும் அதிகமானோர் பலியாகினர். பூகம்பத்தின்போது மீட்புப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்று அதிபர் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதை தொடர்ந்து இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்டன. அதில் தயீப் எர்டோகன் 52% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களிடம் பேசிய துருக்கி தேர்தல் வாரியத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தயீப் எர்டோகனின் வெற்றிச் செய்தி வெளியானதும் அதிபர் மாளிகைக்கு வெளியே உற்சாக கொண்டாட்டங்கள் அரங்கேறின. கைகளில் தேசிய கொடியுடன் திறண்ட பல்லாயிரக்கணக்னோர் தயீப் எர்டோகனை வாழ்த்தி முழக்கமிட்டனர்.எர்டோகன் 2028ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிப்பார்.
The post துருக்கி அதிபர் தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் தயீப் எர்டோகன் :ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டம்!! appeared first on Dinakaran.