எனவே, குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். தவறாக மொழி பெயர்க்கப்பட்ட 6 வினாக்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘டிஎன்பிஎஸ்சி நடத்திய பல தேர்வுகளில் இதுவரை இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படவில்லை. குறிப்பாக நீதித்துறை தேர்வுகளுக்கு கூட இறுதி குறிப்புகள் வெளியாகவில்லையே’’ என்றனர். பின்னர் மனுவிற்கு டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.3க்கு தள்ளி வைத்தனர்.
The post மொழி பெயர்ப்பில் தவறு குரூப் 1 தேர்வில் சலுகை மதிப்பெண் கோரி வழக்கு : டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.