தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களால் ரயில், பஸ்களில் கூட்டம் அலைமோதும் இதற்கென தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நீண்டதூரம் பயணிப்பவர் ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. இன்று காலை 8 மணி முதல் ரயில் டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வரும் 12ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9ம் தேதியும், 13ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10ம் தேதியும், 14ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11ம் தேதியும் பயணம் செய்ய முடியும். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும்படி ரயில்வே துறை கேட்டுக்கொண்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: