இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு,”தமிழ்நாட்டில், 7 மீட்டர் கொண்ட மாநில நெடுஞ்சாலையை, 10 மீட்டராக்கி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றுகின்றனர். அதில் சுங்கச்சாவடிகளை அமைக்கின்றனர், சுங்கச்சாவடிகள் அமைக்கக் கூடாது கூடாது என ஒன்றிய அரசுக்கு பலமுறை வலியுறுத்தித் தொடர்ந்து கடிதம் எழுதிவருகிறோம். புதிய அரசு பொறுப்பேற்ற உடனே முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தான் மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிச்சாலை ஆக்கப்படுகின்றன.
இதில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதில்லை. இதற்காக தான் சட்டமன்ற உறுப்பினர் நன்றி தெரிவித்தார். பொதுவாக நகர பகுதிகளில் 2 வகையான சாலைகள் உள்ளது. ஒன்று நகராட்சிக்கு தொடர்புடையது மற்றொன்று மாநில சாலைகள் ஆகும். முத்துராஜா குறிப்பிட்ட சாலை எந்த சாலை என்பது குறித்து ஆய்வு செய்து விரைவில் முதலமைச்சரின் அனுமதியோடு சாலையை 4 வழிச்சாலை ஆக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்,”என்றார்.
The post சுங்கச்சாவடிகள் தேவையில்லை என ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம் : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!! appeared first on Dinakaran.