திருச்செந்தூர் கோயிலில் அன்புமணி சிறப்பு யாகம்: துலாபாரத்தில் 780 கிலோ அரிசி வழங்கினார்

திருச்செந்தூர் : ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் ெசய்வதற்காக, பாமக தலைவர் அன்புமணி, அவரது மனைவி சவுமியா ஆகியோர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மாலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் திருச்செந்தூர் வந்து தனியார் விடுதியில் தங்கினர்.

ஆடி அமாவாசை தினமான நேற்று அதிகாலை அன்புமணி, மனைவி சவுமியா ஆகியோர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் துலாபாரத்தில் எடைக்கு எடையாகவும், கூடுதலாகவும் சேர்த்து 30 மூட்டையில் 780 கிலோ அரிசியை வழங்கினர். தொடர்ந்து எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் சத்ரு சம்ஹார யாகம் செய்து அன்புமணி வழிபட்டார்.

The post திருச்செந்தூர் கோயிலில் அன்புமணி சிறப்பு யாகம்: துலாபாரத்தில் 780 கிலோ அரிசி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: