தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறைகளை சார்ந்த குழுவினர் இந்த பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளம் பாதித்த சென்னை தரமணி பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். அப்போது வெள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ”மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு எடுத்து கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானது கிடையாது. மழைநீர் வடிகால்களை கடந்த ஆட்சியாளர்கள் முற்றலும் நாசமாக்கிவிட்டார்கள். தமிழக அரசு கோரும் நிவாரண உதவிகளை, நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். இனியும், சென்னை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவநிலை மாற்றங்களால் மழை வெள்ளம் வரும்முன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. ஒவ்வொரு வார்டுக்கும் மருத்துவ முகாம்களை நடத்தி தொற்று நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
The post மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழக அரசு கோரும் நிவாரண உதவிகளை, நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.