ஆழம் அதிகமாக இருந்ததாலும், மறு கரைக்கு செல்ல தூரம் அதிகமாக இருந்ததாலும் நீச்சல் அடிக்க முடியவில்லை. சுமார் 15 நிமிடம் வரை நீச்சல் அடித்து சமாளித்தனர். பின்னர் நீந்த முடியாமல் கூச்சலிட தொடங்கினர். இதை பார்த்து அப்பகுதியில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்து இருவரையும் மீட்டு, தோகூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் ஆரோக்கிய செல்வகுமார் (20), காஜாபேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்த அப்துல்லா மகன் முகமதுசெலார்ஷா (19) என்பதும், கும்பகோணம் பகுதியில் இருந்து பைக்கை திருடி வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் உத்தமர்சீலி கொள்ளிடம் ஆற்று மணல் குவாரி கேஷியர் மணிகண்டனிடம் ரூ.8 லட்சம் பணத்தை பறித்து சென்ற வழக்கில் இவர்கள் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என நம்பர் ஒன் டோல்கேட் போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து இருவரையும் தோகூர் போலீசாரிடம் இருந்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
The post தஞ்சை அருகே போலீஸ் விரட்டியதால் ஆற்றில் குதித்து உயிருக்கு போராடிய 2 திருடர்கள்: பொது மக்கள் மீட்டு, போலீசில் ஒப்படைத்தனர் appeared first on Dinakaran.