இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் 6ம் தேதியுடன் விண்ணப்ப பதிவானது நிறைவு பெற்றிருந்தது. ஜூன் 6ம் நள்ளிரவு நிலவரப்படி 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி இருந்தனர். இந்நிலையில் விண்ணப்ப பதிவிற்கான கால அவகாசத்தை மேலும் 2 நாட்கள் நீட்டித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை கடந்த 9ம் தேதி அன்று வெளியிட்டு இருந்தது. அதன்படி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவானது ஜூன் 10 மற்றும் 11 ஆகிய 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து வந்தனர்.
அதன்படி, மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 பேர் விண்ணக் கட்டணத்தையும், ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 853 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஜூன் 12ம் தேதி ராண்டம் எண், ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியலும் வெளிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அட்டவணைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர 2.54 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.
