தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தும் வகையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் கொள்கை ரீதியில் சில முடிவுகள் எடுப்பது தொடர்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது. அதேபோன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 31ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.
