தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்துக்கான டெண்டரை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்

 


சென்னை: ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்துக்கான டெண்டரை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. மின் திருட்டு, மின் இணைப்பு குளறுபடி, கட்டண வசூல் உள்ளிட்டவற்றுக்காக ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்த ரூ.10 ஆயிரத்து 790 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கிறார்கள். அவர்கள் கணக்கிட்டு எழுதும் யூனிட் அடிப்படையில் பொதுமக்கள் மின்சார கட்டணம் செலுத்தி வருகிறார்கள். இந்த நடைமுறைக்கு பதில் மின்சார பயன்பாடு அளவை மிக எளிதாக, துல்லியமாக கணக்கிட ‘ஸ்மார்ட் மீட்டர்’ இணைப்பு திட்டத்தை அமல்படுத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்குகிறது.

தமிழகத்தில் முதலில் பரீட்சார்த்த அடிப்படையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் சென்னை தி.நகரில் செயல்படுத்தப்பட்டது. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் தி.நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் மின் இணைப்பை நடைமுறைக்கு கொண்டுவர தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (திங்கட் கிழமை) ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை 3 கட்டமாக செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் செய்லபடுத்த முடிவு செய்துள்ளனர். சென்னை தியாகராயர் நகரில் 1.10 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தபோது 2-3 ஆம் கட்ட ஸ்மார்ட் மீட்டர் பொருந்தும் திட்டத்துக்கான டெண்டர் பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்காக 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன. இதில் முதல்கட்டமாக 13 மாவட்டங்களில் 1 கோடியே 17 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பயன்படுத்தப்படும். 2-வது கட்டமாக 1 கோடியே 2 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும், 3-வது கட்டமாக சுமார் 80 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களும் பயன்படுத்தப்படும். இதற்கான டெண்டர் இன்று வெளியிடப்படும் நிலையில் அடுத்த 45 நாட் களில் இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்தினால் தான் ஒன்றிய அரசின் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோகத் திட்டத்தின் கீழ் மானியத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்துக்கான டெண்டரை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம் appeared first on Dinakaran.

Related Stories: