தாம்பரம் திருமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலம் 41வது வார்டு, திருமலை நகர் – நன்மங்கலம் சாலையை ஆக்கிரமித்து சிலர் வீடுகள், கடைகளை கட்டியிருந்தனர். இதனால் அப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி, மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றினர்.

The post தாம்பரம் திருமலை நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: