இதையடுத்து, அதிகாரிகளிடம் பொதுமக்களின் கோரிக்கையை கொண்டு சென்று எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ முயற்சியில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பரந்தாமன் தெருவில் 160 மீட்டருக்கு புதிய சாலை அமைக்கும் பணி, முத்தாலம்மன் கோயில் தெருவில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 160 மீட்டருக்கு புதிய சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 சாலை பணிகள் மற்றும் வேம்புலி அம்மன் கோயில் தெருவில் ரூ.12.6 லட்சம் மதிப்பீட்டில் 300 மீட்டருக்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.
மொத்தம் ரூ.33.6 லட்சம் மதிப்பிலான பணிகளை நேற்று தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தொடங்கி வைத்தார். அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய தலைவர் சங்கீதா பாரதிராஜன், துணை தலைவர் பிரசாத், ஊராட்சி மன்ற தலைவர் ஜனனி சுரேஷ்பாபு, ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.33.6 லட்சம் மதிப்பில் சாலை மழைநீர் வடிகால்வாய் பணி: எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.