அப்போது பின்னால் அமர்ந்து இருந்த ஆர்த்தி மீது டேங்கர் லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆர்த்தி தலையில் பலத்த காயமடைந்து துடிதுடித்து உயிரிழந்தார். ஸ்கூட்டரை ஓட்டி வந்த ரேணுகாதேவி காயங்களுடன் உயிர்தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஆர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த ரேணுகாதேவியை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், டேங்கர் லாரியை ஓட்டிய தாம்பரத்தை சேர்ந்த மாடசாமி(45) என்பவரை கைது செய்தனர். இந்த விபத்தால் சிறிது நேரம் மெரினா காமராஜர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
The post மெரினா சாலையில் லாரி மோதி மாநில கல்லூரி மாணவி பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.