இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறியதாவது; விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை சற்று சரிந்துள்ளது. வருகின்ற 21ம்தேதி சித்ரா பவுர்ணமி முன்னிட்டு மீண்டும் அனைத்து பூக்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பூக்களின் விலை சற்று குறைந்ததால் சென்னை மற்றும் புறநகர் சில்லறை வியாபாரிகள் மற்றும் இல்லதரிசிகள் மார்க்கெட்டுக்கு அதிகமாக வருகின்றனர். இவ்வாறு கூறினார்.
The post விசேஷ நாட்கள், முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை சற்று சரிவு..!! appeared first on Dinakaran.