பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் 43*, அட்கின்ஸன் 35, ஹாரி ப்ரூக் 17 ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்காவின் ஜெரால்ட் கோட்ஸி 3. என்கிடி, ஜேன்சன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு கிடைக்கும் 3-வது வெற்றி இதுவாகும்.
இன்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம் இந்த உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து தனது 3-வது தோல்வியை சந்தித்துள்ளது. தென்னாப்பிரிக்கா புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 9-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post உலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணியை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி! appeared first on Dinakaran.
