உஜ்ஜயினியில் உள்ள மஹாகல் மஹாலோக் கோயில் நடைபாதையை திறக்கும் விழாவில் நேற்று முன்தினம் இரவு கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: நாங்கள் நல்வழியில் நடப்பதை உறுதிசெய்ய வேண்டும். நீங்கள் (ஆன்மீக தலைவர்கள்) எங்களை சரியான திசையில் வழிநடத்த வேண்டும். ஏனென்றால் அரசியல் பாதை மிகவும் வழுக்கும். ஒவ்வொரு அடியிலும் சறுக்கிவிடுமோ என்ற பயம் உள்ளது. சில சமயங்களில் நாங்கள் நழுவுகிறோம், சில சமயங்களில் மற்றவர்களை நழுவச்செய்கிறோம். ஆனால் உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்காக இருக்கட்டும். அதன்மூலம் நாங்கள் அறத்தின் வழியில் நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post சறுக்கிவிடுமோ என்ற பயம் உள்ளது அரசியல் பாதை வழுக்குகிறது: மபி முதல்வர் புலம்பல் appeared first on Dinakaran.