மகளிர் இரட்டையர் பிரிவில் அஷித் சூர்யா – அம்ருதா பிரமுதேஷ், ரூத்பர்னா பண்டா – ஸ்வேதபர்னா பண்டா ஜோடிகளும் ஏமாற்றமளித்தன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மற்றொரு இந்திய வீரர் பிரியன்ஷு ராஜ்வத்தும் தோல்வியை தழுவினார். முதல் சுற்றில் நேற்று இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், இன்று நடைபெறும் ஒற்றையர் ஆட்டங்களில் கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்ஷயா சென், எச்.எஸ்.பிரணாய், பி.வி.சிந்து கலப்பு இரட்டையர் பிரிவில் சதீஷ்குமார் கருணாகரன்/அதா வாரியத், சுமிதிரெட்டி/சிக்கி ரெட்டி, மகளிர் இரட்டையர் பிரிவில் சிம்ரன் சிங்/ரிதிகா தாக்கர், தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா, த்ரீஷா ஜாலி/காயத்ரி கோபிசந்த், ஆண்கள் இரட்டையர் பிரிவில் கிருஷ்ண பிரசாத் காரகா/சாய் பிரதீக் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
The post சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் சாத்விக் – சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.