இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கடை உரிமையாளர்கள் விரிவாக்கப் பணிகளுக்காக கடைகளைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வர்த்தக சங்கத்தினர்கள் இணைந்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி நகைகடை பஜார், ஜவுளிகடை பஜார், சந்தை கடைகள், தேனி ரோடு, பேரையூர் ரோடு, மதுரை ரோடு மற்றும் வத்தலக்குண்டு ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
The post கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் கடையடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.