பயணிகள் குறைவாக முன்பதிவு செய்திருந்தாலும் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனவும், காலை 8 மணிக்கு புறப்படும் கப்பல் பகல் 12 மணிக்கு இலங்கையை சென்றடையும். அதே நாள் மதியம் 2 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகையை வந்தடையும் என கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்று கிழமையான இன்று வெறும் 8 பேர் மட்டுமே இலங்கை செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். அந்த 8 பேருடன் இன்று காலை கப்பல் இலங்கைக்கு புறப்பட்டு சென்றது. கப்பலில் பணியாளர்கள் மட்டும் சுமார் 15 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நாகையில் இருந்து வெறும் 8 பேருடன் இலங்கை சென்ற கப்பல் appeared first on Dinakaran.