எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குதர ஆட்சேபனை இல்லை: தயாநிதிமாறன் எம்.பி.

சென்னை: எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு தர தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். விலக்கு தர கோரும் காரணங்கள் நியாயமானது என நீதிமன்றம் கருதினால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்துள்ளார். தேர்தல் பிரசாரத்தில், மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதி பற்றி பழனிசாமி பேசியதை எதிர்த்து அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்குதர ஆட்சேபனை இல்லை: தயாநிதிமாறன் எம்.பி. appeared first on Dinakaran.

Related Stories: