செப்.21 முதல் 23 வரை பயணம் ஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடி உரை: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி செப்டம்பர் 21ம் தேதி முதல் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். செப்டம்பர் 22ம் தேதி நியூயார்க்கில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றுவார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர் அமெரிக்க அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 23ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.மேலும் நியூயார்க்கில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி நிறுவன அதிகாரிகளுடன் மோடி உரையாடுவார்.

The post செப்.21 முதல் 23 வரை பயணம் ஐநா பொதுச்சபையில் பிரதமர் மோடி உரை: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: